பூசணிக்காய் மோர்க்குழம்பு
தேவையானவை:- பூசணிக்காய் – 1, தயிர் – அரை லிட்டர் பாலை உறைய வைக்கவும். , தேங்காய் – பாதி துருவவும், பச்சைமிளகாய் – 4, சீரகம் – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா 1 டீஸ்பூன் ஊறவைக்கவும், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 டீஸ்பூன், தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- பூசணிக்காயைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத்தில் நீளமாக நறுக்கி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் வதக்கி மஞ்சள் பொடி போட்டு அரை கப் நீரூற்றி வேகவிடவும். தயிரைக் கடைந்து வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பு பச்சரிசியைப் பச்சைமிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலோடு சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பூசணிக்காயில் ஊற்றவும். லேசாக மேலே நுரைத்து வரும்போது உப்பு சேர்த்துக் கடைந்த தயிரை ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக