எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 பிப்ரவரி, 2020

பலாக் கொட்டை ( விதை) மசால்.

பலாக் கொட்டை (விதை) மசால் :-

பலாக்கொட்டை - 20 , சின்ன வெங்காயம் - 5, வெள்ளைப்பூண்டு - 5 பல், தக்காளி - சின்னம் - 1, மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன் , கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- பலாக்கொட்டைகளை நான்காக நறுக்கித் தோலுரித்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து இரண்டாக வெட்டிய சின்னவெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். தக்காளியைப் பொடியாக   அரிந்து போட்டு வதக்கி அதில் உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். மசாலா நன்கு வதங்கியதும் வெந்த பலாக்கொட்டை சேர்த்துக் கிளறி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மில் வேகவிடவும். வெந்து சுண்டியதும் இறக்கி சாம்பார் சாதம், தயிர் சாதத்தோடு தொட்டுக் கொள்ளப் பரிமாறவும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...