எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

அரவணைப் பாயாசம். - ARAVANAIP PAYASAM.

அரவணைப் பாயாசம்.

தேவையானவை:- சிவப்பு கேரளா மட்டையரிசி/பாசுமதி அரிசி – கால் கப், மண்டை வெல்லம் – 1 கப் துருவியது , நெய் – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை, தேங்காய்ப் பல் – 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப்

செய்முறை:- அரிசியைக் களைந்து வைக்கவும். வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி வைக்கவும். நெய்யில் தேங்காயைப் பொன்னிறமாக வறுக்கவும். மிச்ச நெய்யில் அரிசியை லேசாக வறுத்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிறிது வெந்ததும் வெல்லப்பாகைச் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் நெய்யில் வதக்கிய தேங்காய்த்துண்டுகள் ஏலப்பொடி சேர்த்து இறக்கி நிவேதிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...