எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

குருணை மிளகு உப்புமா.- BROKEN RICE PEPPER UPMA.

குருணை மிளகு உப்புமா.

தேவையானவை:- பச்சரிசிக் குருணை – 2 கப், மிளகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு , உளுந்து, கருவேப்பிலை,பொடித்த மிளகைத் தாளித்து பச்சரிசிக் குருணையைப் போட்டு வறுக்கவும். இதில் கொதித்த தண்ணீரை விட்டுக் கிளறி உப்பு சேர்த்து மூடிபோட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வேகவிடவும். அதன் பின் திறந்து நன்கு கிளறி உதிராக ஆனதும் இறக்கி நிவேதிக்கவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...