எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

பகாளாபாத் - BAGHALABATH.

பகாளாபாத் ;-

தேவையானவை ;-
சாதம் – 2 கப், புது தயிர் - 100 மிலி, பால் – 2 கப், உப்பு - 1/4 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, கறிவேப்பிலை - 1 இணுக்கு, இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை. பொடியாக அரிந்த கேரட், வெள்ளரிக்காய், கொத்துமல்லித்தழை – தலா ஒரு டீஸ்பூன், சிவந்த மாதுளை முத்துகள் – 1 கைப்பிடி., கிஸ்மிஸ், முந்திரி – தலா 10.

தயாரிப்பு :-
சாதத்தை குழைய மசித்து தயிரும் உப்பும் சேர்க்கவும்.பாலையும் வெண்ணெயையும் சேர்க்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணை காயவைத்து கடுகு., ஜீரகம் போட்டு வெடித்ததும்., பெருங்காயம் சேர்த்து., பச்சை மிளகாய்., கறிவேப்பிலை., இஞ்சி., தாளித்து சாதத்தில் கொட்டி நன்கு பிசையவும்.முந்திரியையும் கிஸ்மிஸையும் பொரித்துப் போட்டு துருவிய வெள்ளரி, கொத்துமல்லித்தழை, மாதுளை முத்து சேர்த்துக் கலக்கி நிவேதிக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...