எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 செப்டம்பர், 2023

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-



 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு (மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை இதில் எது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திச் செய்யலாம்.), அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காகதேங்காய்ப் பால் – 1 கப்சின்ன வெங்காயம் – 10உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ( மேற்கூறியுள்ள கீரைகளில் ஒன்றை ) ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் தாளித்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும். அதன் பின் வெங்காயத்தை வதக்கி கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும். இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். வயிற்றுப் புண், அல்சர் தீர கீரை மண்டியை அடிக்கடி செய்து அருந்தலாம். 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...