எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

MANATHTHAKKAALIK KEERAI MANDI. (SOLANUM NIGRUM. ). மணத்தக்காளிக் கீரை மண்டி.

மணத்தக்காளிக்கீரை மண்டி::- ( நீர்ச் சாறு)
**********************************
NEEDED:-

MANATHAKKAALIK KEERAI - 1 BUNCH
SMALL ONION - 10 NOS PEEL AND HALVED
RICE RINSED WATER - 2 CUP
COCONUT - 1 TBLSPN. GROUND FINELY
OIL - 2 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
RED CHILLIE -1 NO HALVED
SALT - 1/2 TSP

METHOD:-

CLEAN, WASH AND CHOP THE GREENS. HEAT OIL IN A PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN  ADD JEERA, RED CHILLIE AND SMALL ONIONS. SAUTE FOR A MINUTE THEN ADD THE GREENS. SAUTE FOR ANOTHER 2 MINUTES THEN ADD THE RICE RINSED WATER. BRING TO BOIL AND SIMMER IT FOR ANOTHER 5 MINUTES. ADD THE SALT AND COCONUT PASTE AND REMOVE FROM FIRE.

WE CAN DRINK THIS OR CAN EAT THIS MIXED WITH PLAIN RICE.

மணத்தக்காளிக் கீரை மண்டி :-
தேவையானவை:-

மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.
சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.

3 கருத்துகள்:

  1. இல்லை தனபால். தேங்காய்ப் பால் ஊற்றினால் கசக்காது

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...