எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

ஆலு மேத்தி

ஆலு மேத்தி


தேவையானவை:- அவித்த உருளைக்கிழங்கு – 2, வெந்தயக் கீரை – 1 கட்டு, மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்- 3 டீஸ்பூன்,சீரகம் – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரிந்தது.

செய்முறை:- அவித்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து உதிர்த்து வைக்கவும். வெந்தயக் கீரையை அலசிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துச் சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயக்கீரையைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள்சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் உதிர்த்த உருளையைச் சேர்த்து நன்கு சுருளக்கிளறி இறக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறவும்.

வியாழன், 20 நவம்பர், 2025

லோபியா க்ரேவி


லோபியா க்ரேவி

தேவையானவை:- காராமணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, சிறிது, உப்பு - அரை டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:- காராமணியை லேசாக வறுத்து குக்கரில் நாலைந்து விசில் வரும்வரை வேகவிடவும். பெரியவெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து அரைத்த பெரியவெங்காயம் போட்டு வதக்கவும். அதிலேயே இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கி வாசம் வந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து திறக்கி அரைத்த தக்காளியை ஊற்றவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரியும்போது வேகவைத்த காராமணியைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இதை சப்பாத்தி, நான், ருமாலி ரொட்டி பராத்தாவுடன் தொட்டுக் கொள்ளலாம்.

ஞாயிறு, 16 நவம்பர், 2025

ஆலு டமாட்டர்


ஆலு டமாட்டர்.

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 3, ஜீரகம் - 1 டீஸ்பூன், வரமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன், ஆம்சூர்ப் பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:- உருளை மற்றும் தக்காளியை நன்கு கழுவி விரல் நீளத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளிக்கவும். அதில் உருளை , தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.  உப்பு, ஆம்சூர் பொடி, வரமிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். நன்கு கிளறி வேகவைத்து  ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.  ருமாலி ரோட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

வியாழன், 13 நவம்பர், 2025

ஷாஹி பனீர்

ஷாஹி பனீர்


தேவையானவை:- பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் (அரைத்தது) – 1, பெரிய தக்காளி (அரைத்தது ) – 1, இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன், மல்லி பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், சீனி - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :- பனீரை 1 இஞ்ச் அளவு துண்டுகளாக செய்து கடாயில் எண்ணெய் ஊற்றிப் பொறித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும். அதே எண்ணையில் வெங்காயத்தை சிவக்க வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அதுவும் சிவக்கையில் மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சப் பொடி., கரம் மசாலா பொடி ., உப்பு ., ஜீனி போடவும். தக்காளி விழுதை சேர்த்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் . பனீர் துண்டுகளைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 7 முதல் 10 நிமிடங்கள் வரை சிறிய தீயில் சமைக்கவும். சப்பாத்தி அல்லது நான் கூட சூடாக பரிமாறவும்.

செவ்வாய், 11 நவம்பர், 2025

பனீர் கேப்ஸிகம் சுக்கா சப்ஜி


பனீர் கேப்ஸிகம் சுக்கா சப்ஜி

தேவையானவை:- பனீர் - 200 கி சின்னச் சதுரமாக வெட்டவும். குடைமிளகாய் - 1 நீளமாக வெட்டவும். பெரிய வெங்காயம் - 2 நீளமாக வெட்டவும். இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தக்காளி - 2. ( அரைக்கவும்), சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், சீனி - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பனீரைக் கழுவி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சீனி, கரம் மசாலா பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் பனீரைச் சேர்த்து 5 நிமிடம் சமைத்து எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரித்  துண்டுகளுடன் சப்பாத்தி, ருமாலி ரோட்டி, நான், குல்சாவோடு பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...