எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 பிப்ரவரி, 2022

செட்டிநாட்டுக் கோழிக் குழம்பு

செட்டிநாட்டுக் கோழிக் குழம்பு


தேவையானவை:- கோழி - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 20, பூண்டு - 10 பல், தக்காளி - 1, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- சோம்பு, சீரகம் - தலா அரைடீஸ்பூன்,  பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய்  - தலா 1, கருவேப்பிலை - 1 இணுக்கு,  வறுத்து அரைக்க :- வரமிளகாய் 10, மல்லி - 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 2 பல், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:- கோழியைத் துண்டுகள் செய்து கழுவி வைக்கவும். வெங்காயம் தக்காளி பூண்டை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மசாலா சாமான்களை வறுத்து ஆறியதும் நீர் சேர்த்து அரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து சோம்பு, சீரகம், பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும் கருவேப்பிலை போட்டு கோழியையும் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த மசாலாவைப் போடவும். நன்கு திறக்கி விட்டு 3 கப் நீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து சார்ந்ததும் இறக்கவும். குக்கரில் ஒரு சவுண்ட் கோழியை வேகவைத்து எடுத்தும் இப்படிக் குழம்பு வைக்கலாம். ஆனால் கோழி கரைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...