எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கத்திரி வத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்திரி வத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜனவரி, 2023

கத்திரி வத்தல்

கத்திரி வத்தல்


தேவையானவை:- கத்திரிக்காய் – ஒரு கிலோ ( முத்தல் தனியாக, இளசு தனியாகப் பிரித்துப் போடலாம்), உப்பு – 2 டீஸ்பூன், புளி – 4 சுளை.

செய்முறை:- கத்திரிக்காய்களைக் கழுவி நீளவாக்கில் அரை இஞ்ச் அகலம் இருக்குமாறு வெட்டவும். இட்லிப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பைப் போட்டுக் கத்திரிக்காய்களையும் போட்டு மூன்று நிமிடங்கள் வேகவிடவும்.

நீரை வடிகட்டி கத்திரிக்காய்களை ஒற்றை ஒற்றையாகப் பேப்பரில் அல்லது தட்டில் பரப்பி வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைத்து எடுக்கவும். இதை வத்தல் குழம்பு செய்யப் பயன்படுத்தலாம். குழம்பு செய்யும்போது சிறிது நேரம் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

 

சனி, 20 பிப்ரவரி, 2021

கத்திரி வத்தல், அவரை வத்தல், மாவத்தல் குழம்பு.

கத்திரி வத்தல், அவரை வத்தல், மாவத்தல் குழம்பு. 


தேவையானவை :- கத்திரிவத்தல், அவரை வத்தல் - தலா 10, மாவத்தல் - 5, சின்ன வெங்காயம் - 8, பூண்டு- 4 பல், தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- கத்திரி வத்தல் அவரை வத்தல் மாவத்தலைக் கழுவி ஊறவைக்கவும். வேகவைத்த துவரம் பருப்புடன்  வற்றல்கள், பெருங்காயம், மஞ்சள்தூள், பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டுக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். வெந்ததும் லேசாக மசித்து விட்டு சாம்பார்பொடியைப் போடவும். புளியை அரைக் கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் ஊற்றிக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் தாளித்து உபயோகிக்கவும். 


 
Related Posts Plugin for WordPress, Blogger...