எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 மே, 2023

சௌசௌ கூட்டு

சௌசௌ கூட்டு


தேவையானவை:- சௌசௌ – 1, பாசிப்பருப்பு + கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் -1, பெரிய வெங்காயம் – பாதி, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க- எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு.  

செய்முறை:- சௌசௌவைத் தோல் சீவிப் பொடிப்பொடியாக அரியவும். பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் கழுவி அரைமணிநேரம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தையும் பொடியாக அரியவும். பச்சைமிளகாயைக் கீறி வைக்கவும். ஒரு ப்ரஷர் பானில் ஊறவைத்த பருப்புகள்,சௌசௌ, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தைப் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கி உப்பு சேர்த்து மசிக்கவும். எண்ணெயில் உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். 

இது வாய்க்கு இதமான இளசான கூட்டு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...