எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சாம்பார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாம்பார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூலை, 2020

சிவப்பு முள்ளங்கி சாம்பார்.

சிவப்பு முள்ளங்கி சாம்பார்.


தேவையானவை:- சிவப்பு முள்ளங்கி - 250 கி, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு, ஒரு சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லித் தழை - சிறிது.

செய்முறை:- சிவப்பு முள்ளங்கியை நன்கு கழுவி வட்டத்துண்டுகளாக்கவும். சின்ன வெங்காயம் தக்காளியை நறுக்கு முள்ளங்கியோடு சேர்த்துப் பருப்பில் போட்டு ஒருதுண்டு பெருங்காயம், மஞ்சள் தூள் கால் கப் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். உப்பு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி சேர்த்து வைக்கவும். குக்கரைத் திறந்து புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம், பெருங்காயம் கருவேப்பிலை தாளித்துக் கொத்துமல்லி தூவி இறக்கவும். சாதம் தோசை இட்லி  போன்றவற்றோடு பரிமாறவும்.
  

திங்கள், 22 அக்டோபர், 2018

வெண்டைக்காய் சாம்பார்.

வெண்டைக்காய் சாம்பார்.

தேவையானவை :-

வெண்டைக்காய் - கால்கிலோ, சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், புளி - ஒரு நெல்லி அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் -  துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில்  ஊறவைத்து சாறெடுத்து உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்க்கவும் . எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம் தாளித்து பெருங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும். இதில் வெண்டைக்காயை இரு நிமிடம் வதக்கி அதன் பின் சின்னவெங்காயம் தக்காளி சேர்க்கவும். இன்னுமொரு நிமிடம் வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்க விடவும். 3 நிமிடங்கள் கொதித்ததும் பருப்பை  மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

வெண் பூசணிக்காய் சாம்பார்.

பூசணிக்காய் சாம்பார். :-


தேவையானவை :- பூசணிக்கீத்து - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 1,பெருங்காயம் - 1 துண்டு.  சாம்பார்தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 2 டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லி தழை - சிறிது.

செய்முறை :- பூசணிக்கீத்தை ஒரு இஞ்ச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை உரித்து இரண்டாக வெட்டவும். தக்காளியைத் துண்டு செய்யவும். மூன்றையும் வெந்த துவரம்பருப்புடன் ப்ரஷர் குக்கரில் போட்டு மஞ்சள் தூளையும் பெருங்காயத்தையும் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து சாறு எடுத்து உப்பையும் சாம்பார் தூளையும் போட்டு வைக்கவும். வெந்த காயில் இந்த புளிக்கலவையை ஊற்றி இரண்டு கொதி கொதிக்க வைக்கவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சீரகம் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்து சாம்பாரில் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சேர்த்து இறக்கி சூடான சாதம், தோசை, இட்லியுடன் பரிமாறவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...