எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 அக்டோபர், 2014

நவராத்திரி ரெசிப்பீஸ். NAVRATHRI RECIPES





இந்த  நவராத்திரி ரெசிப்பீஸ் செப்டம்பர் 16 - 30, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1.சீரக சாதம் :-
தேவையானவை:-
சீரக சம்பா அரிசி/ பாசுமதி அரிசி/பச்சரிசி- 1 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்
செய்முறை:-
சீரக சம்பா, பாசுமதி. பச்சரிசி இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு கப் எடுத்துக் களைந்து வைக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி சீரகம், முந்திரி தாளிக்கவும். முந்திரியை எடுத்து விட்டு அரிசியை வதக்கி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியதும் திறந்து முந்திரி சேர்த்து நிவேதனம் செய்யவும்.

2.மிளகு சாதம்:-
தேவையானவை:-
சீரக சம்பா சாதம்  - 2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
செய்முறை:- சீரக சம்பா அரிசியைக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஒரு பேசினில் உதிர்த்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்தை வாசனை வரும் பக்குவத்தில் வறுத்து மிளகை கடைசியில் சேர்த்து லேசாக வறுத்து இறக்கவும். உப்புடன் சேர்த்துப் பொடித்து சாதத்தில் தூவி நெய்யை உருக்கி ஊற்றிக் கலந்து நிவேதிக்கவும்.

3. கேரட் புட்டு:-
தேவையானவை:-
பாசிப்பருப்பு – 1 கப்
கேரட் – 1 கப் துருவியது
தேங்காய் – ½ கப் துருவியது
வெல்லம் – ½ கப் துருவியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை.

Related Posts Plugin for WordPress, Blogger...