எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 அக்டோபர், 2010

CHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..

CHETTINAD MUTTON KUZAMBU..:-
NEEDED :-
MUTTON - 1/4 KG ( FOR 2 PPL)
SMALL ONION - 15 NOS.
GARLICS - 10 PODS.
TOMATO - 1 NO.
TAMARIND - 3 PODS
SALT - 1 1/2 TSP

TO GRIND :-
RED CHILLIES - 10 NOS.
CORRIANDER SEEDS - 1 TBLSPN.
SOMPH - 2 TSP
JEERA - 1 TSP
BLACK PEPPER - 10 NOS.
POPPY SEEDS ( KHAS KHAS) - 1 TSP.
SMALL ONION - 2 NOS
GARLIC - 1 POD

TO FRY :-
SOMPH - 1/4 TSP
CLOVE - 2 NOS
CHINNAMON - 1 INCH PIECE
BAY LEAF - 1/8 TH
KALPASIP POO - 1
CURRY LEAVES - 1 ARK
OIL - 1/2 TBLSPN.

METHOD :-
CLEAN AND COOK THE MUTTON IN A PRESSURE COOKER WITH LITTLE WATER .
PEEL AND HALVE ONIONS AND GARLICS AND TOMATO.
SOAK TAMARIND WITH SALT IN A CUP OF WATER AND TAKE THE PULP.
FRY RED CHILLIES., CORRIANDER SEEDS., SOMPH., JEERA., PEPPER., POOPY SEEDS IN A TAWA WITH 1/2 TSP OIL. GRIND THIS WITH 2 ONION AND 1 GARLIC.
HEAT OIL IN A TAWA ADD SOMPH., CLOVES., CINNAMON., BAY LEAVES., KALPASIP POO., CURRY LEAVES. THEN ADD ONIONS AND GARLICS., TOMATO . SAUTE FOR SOME TIME . ADD THE GROUND MASALA AND SAUTE TILL OIL SEPERATES AT THE SIDES . THEN AND TAMARIND PULP. ADD MUTTON WITH COOKED WATER . BRING TO BOIL. SIMMER FOR 20 MIN AND COOK TILL MUTTON IS TENDER . SERVE IT WITH PLAIN RICE., OR CHAPPATIS.. OR DOSAI AND IDDLIES.

THIS IS CHETTINAD SPECIAL MUTTON KUZAMBU WITHOUT COCONUT AND SPICY.


செட்டிநாடு மட்டன் குழம்பு :-
தேவையானவை :-
மட்டன் - 1/4 கிலோ ( 2 பேருக்கு)
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
தக்காளி - 1
புளி - 3 சுளை
உப்பு - 1 1/2 டீஸ்பூன்.

அரைக்க :-
வரமிளகாய் - 10
தனியா ( கொத்துமல்லி விதை) - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

தாளிக்க :-
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இஞ்ச் துண்டு.,
இலை - 1/8 பீஸ்
கல்பாசிப்பூ - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை :-
மட்டனை சுத்தம் செய்து பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணிரில் நன்கு வேக வைக்கவும் . வெங்காயம் பூண்டை தோலுரித்து., இரண்டாக அரிந்து கொள்ளவும். தக்காளியைத்துண்டுகள் செய்யவும். புளியையும் உப்பையும் 1 டம்ளர் தண்ணீரில் ஊறப் போடவும். வாணலியில் அரை ஸ்பூன் எண்ணையில் மிளகாய்., மல்லி., சோம்பு., சீரகம்., மிளகு., கசகசாவை
வறுக்கவும். இத்துடன் வெங்காயம் ., பூண்டு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு., பட்டை., கிராம்பு., இலை., கல்பாசிப்பூ., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் ., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி., அரைத்த மசாலாவை சேர்க்கவும். பக்கங்களில் எண்ணைய் பிரியும் வரை வதக்கி., புளித்தண்ணீரையும் வேகவைத்த மட்டனையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் சிம்மில் 20 நிமிடம் வேகவைத்து மட்டன் வெந்ததும் இறக்கவும். இது சாதம்., சப்பாத்தி., தோசை., இட்லியுடன் சாப்பிட ஏற்றது.

இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம்.. இது தேங்காய் இல்லாமல்., அம்மியில் அரைத்து செய்யப்படுவது.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

VENDAIKKAAY ( LADIES FINGER ) MANDI.. வெண்டைக்காய் மண்டி..

VENDAIKKAAY MANDI..:-
NEEDED :-
VENDAIKKAAY ( LADIES FINGER ) - 250 GMS
GREEN CHILLIES - 10 NOS . HALVED
SMALL ONIONS - 15 NOS
GARLICS - 15 PODS.
RED CHILLIES - 2 NOS
RICE WASHED WATER - 4 CUPS.
TARMARIND - 1 LEMON SIZE BALL.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
FENUGREEK - 1/2 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1 TSP
OIL - 1 TBLSPN.

METHOD :-
WASH AND CLEAN THE LADIES FINGER AND CUT INTO I INCH PIECES.
PEEL AND HALVE ONIONS AND GARLICS. HALVE RED CHILLIES.
SOAK TARMARIND IN RICE WASHED WATER. HEAT OIL IN A PAN ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD URAD DHAL THEN ADD ASAFOETIDA., AND FENUGREEK., AND REDCHILLIES . ADD CURRY LEAVES.,GREE CHLLIIES AND SAUTE FOR 1 MIN AND ADD LADIES FINGER ., ONIONS AND GARLICS. SAUTE FO 2 MINUTES . TAKE THE TAMARIND PULP FROM RICE WATER AND ADD IT IN THE PAN . BRING TO BOIL. KEEP IN SIM AND COOK FOR 20 MIN TILL IT BECOMES THICK AND SERVE IT WITH PLAIN RICE OR CURD RICE.
NOTE;- IF U DONT HAVE THE RICE WASHED WATER THEN FRY 1/4 TBL SPN OF RAW RICE AND 1 TSP OF FENUGREEK AND 1/8 PINCH OF ASAFOETIDA AND POWDERED IT AND ADD IT TO THE TURMARIND PULP.

THIS IS A CHETTINADU SPL ITEM AND IT WILL BE PREPARED VENDAIKKAAY WITH BOILED MOCHAI., OR BOILED CHANNA AND MAVADU INJI ., CAPSICUM., AND WITH MIXED VEGETABLES TOO ..

வெண்டைக்காய் மண்டி :-
தேவையானவை:-
வெண்டைக்காய் - 250 கி்ராம்
பச்சை மிளகாய் - 10 ரெண்டாக வகிர்ந்தது..
சின்ன வெங்காயம் - 15
வெள்ளைப் பூண்டு - 15 பல்
வர மிளகாய் - 2
அரிசி களைந்த தண்ணீர் - 4 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
வெண்டைக்காய்களை கழுவி துடைத்து 1 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்.
சின்ன வெங்காயம்., பூண்டை தோல் உரித்து ரெண்டாக குறுக்கில் நறுக்கவும். வரமிளகாயை ரெண்டாக கிள்ளி வைக்கவும். புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊறப்போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய் ., கருவேப்பிலை போடவும்.. பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கி பின் வெண்டைக்காய்., சின்ன வெங்காயம் ., பூண்டு போடவும். 2 நிமிடம் நன்கு வதக்கி புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். கொதி வந்ததும் மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து கெட்டியானதும் இறக்கி சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..

குறிப்பு :- அரிசி களைந்த தண்ணீர் இல்லாவிட்டால் 1/4 டேபிள் ஸ்பூன் அரிசி., 1 டீஸ்பூன் வெந்தயம்., 1/8 இஞ்ச் பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து போடவும்.

இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம்.. இதை வெண்டைக்காய் மற்றும் வேகவைத்த மொச்சையுடன் அல்லது வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் மாவடு இஞ்சி ., குடை மிளகாயுடன் அல்லது பலகாய் மண்டியாக செய்யலாம்..

வியாழன், 14 அக்டோபர், 2010

AAMLA (GOOSEBERRY) RICE... முழு நெல்லிக்காய் சாதம்..


AAMLA RICE..:-
NEEDED:-
COOKED RICE - 2 CUPS..
AAMLA (GOOSEBERRY) - 6 NOS.
GREEN CILLIES - 2 NOS.
SALT - 1/2 TSP.
TURMERIC POWDER - 1 PINCH
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 2 TSP.

METHOD :-
GRIND AMLA ., GREEN CHILLIES AND SALT . IN A MIXIE WITHOUT ADDING WATER.
HEAT OIL IN A PAN ADD MUSTARD WHEN IT SPLLUTTERS ADD URAD DHAL THEN ADD CURRY LEAVES AND TURMERIC POWDER. OFF THE GAS AND ADD IT TO RICE.. ADD THE GROUND PASTE IN RICE AND MIX WELL. SERVE IT WITH CURD., MASALVADAIS., AND APPALAM.

முழு நெல்லிக்காய் சாதம்:-
தேவையானவை:-
சாதம் - 2 கப்
முழு நெல்லிக்காய் - 6
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இ்ணுக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
முழு நெல்லிக்காய்., பச்சை மிளகாய்., உப்பை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை .,உப்பு போட்டு இறக்கி சாதத்தில் சேர்க்கவும். அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி தயிர்.,மசால்வடை அப்பளத்துடன் பரிமாறவும்...

வெள்ளி, 8 அக்டோபர், 2010

PLANTAIN FRY.. எண்ணெய் வாழைக்காய்..

PLANTAIN FRY..:-
NEEDED :-
PLANTAIN - 1 NO
RED CHILLI POWDER - 1 TSP.
TURMERIC POWDER - 1 PINCH
CURRY LEAVES - 1 ARK
GARLIC - 2 PODS.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
SOMPH - 1/4 TSP
SALT - 1/3 TSP
OIL - 1 TBLSPN.

METHOD :-
PEEL ., WASH AND CUT THE PLANTAIN IN TRIANGLES.
ADD CHILLI PWDR., TURMERIC PWDR., SALT., CURRY LEAVES AND SMASHED GARLICS.
MIX WELL. HEATOIL IN A KADAI ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD SOMPH N PLANTAIN PIECES WITH MASALA.. STIRR WELL . COOK IN A MEDIUM FIRE TILL CRISPY.. SERVE IT WITH SAMBAR RICE., N MOORKKUZAMBU RICE AND CURD RICE.

எண்ணெய் வாழைக்காய்..:-
தேவையானவை :-
வாழைக்காய் - 1
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
பூண்டு - 2 பல்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
வாழைக்காயைத் தோல்சீவி., கழுவி., முக்கோண ஸ்லைசுகளாக வெட்டவும். மிளகாய்ப்பொடி., மஞ்சள்பொடி., உப்பு., கருவேப்பிலை., நசுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கலக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்.,சோம்பு போட்டு பொரிந்ததும் காயை மசாலாவுடன் போட்டு கிளரவும்... மிதமான தீயில் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.. சாம்பார் சாதம் மற்றும் மோர்க்குழம்பு சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..

செவ்வாய், 5 அக்டோபர், 2010

MUSHROOM GRAVY.. காளான் க்ரேவி..

MUSHROOM GRAVY..:-
NEEDED:-
MUSHROOM - 1 PACKET
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
GINGER - 1 INCH PIECE
GARLIC - 4 PODS
RED CHILLI POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 1 TSP
GARAM MASALA - 1/4 TSP
TURMERIC POWDER - 1 PINCH
SUGAR - 1/4 TSP
SALT - 1/2 TSP
OIL - 2 TSP

METHOD:-
CLEAN AND CUT THE MUSHROOMS INTO 4 PIECES EACH.. PARABOIL FOR 3 MINUTES AND STRAIN THE WATER ., KEEP ASIDE. GRIND ONION., TOMATO SEPERATELY. GRIND GINGER AND GARLIC. HEAT OIL IN A PAN ADD ONION PASTE .. SAUTE TILL BROWN. ADD GINGER GALIC PASTE AND FRY WELL.. TILL OIL SEPRATES. ADD CHILLI PWDR., CORRIANDER PWDR., TUMERIC., GARAM MASALA., SALT AND SUGAR.. FRY FOR 1 MIN AND ADD TOMATO PUREE OR PASTE.. ADD MUSHROOMS AND POUR 1 TUMBLER WATER .. STIRR WELL AND COVER IT AND COOK FOR .5 MIN AND SERVE HOT WITH NAN OR CHAPPATIS OR PHULKAS.. KULCHAS OR FRIED RICES..

காளான் க்ரேவி:-
தேவையானவை :-
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
காளானை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் தண்ணீரில் போட்டு அல்லது மைக்ரோ வேவில் அரை வேக்காடாக வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். வெங்காயம்., தக்காளியை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி., பூண்டையும் அரைத்துக்கொள்ளவும்.. பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.. பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது போடவும்.. நன்கு வதக்கி., எண்ணெய் பிரிந்ததும் ., மிளகாய்ப் பொடி., மல்லிப்பொடி., மஞ்சள்பொடி., கரம் மசாலா., உப்பு., சீனி போட்டு வதக்கவும். தக்காளி விழுது., காளான் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து சூடாக நான்., சப்பாத்தி., ஃபுல்கா ரொட்டி.,குல்ச்சா அல்லது ஃப்ரைட் ரைஸுடன் பரிமாறவும்..
Related Posts Plugin for WordPress, Blogger...