எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 டிசம்பர், 2023

11.வெஜ் லெமன் சேமியா

11.வெஜ் லெமன் சேமியா



தேவையானவை:- சேமியா - 1 பாக்கெட்பெரிய வெங்காயம் - 1, காரட் -சின்னம் 1, பட்டாணி - ஒரு கைப்பிடிபச்சைமிளகாய் - 1,உப்பு - அரை டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎலுமிச்சைச் சாறு - அரை மூடிதாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகுஉளுந்து தலா - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெங்காயம்பச்சைமிளகாய்காரட்டை நீளமாக நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகுஉளுந்து தாளித்து வெங்காயம்பச்சைமிளகாய்பட்டாணிகேரட்டைத் தாளிக்கவும்நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்உப்புச்  சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவைச் சேர்த்துக் கிளறி தீயை அடக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு இரு நிமிடங்கள் வேகவிடவும்அடுப்பை அணைத்து மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு கலக்கித் திரும்ப மூடி வைக்கவும்தக்காளி சாஸ் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

10.கோங்குரா துவையல்/சட்னி

10.கோங்குரா  துவையல்/சட்னி


தேவையானவை:- புளிச்சகீரை - 1 கட்டுவரமிளகாய் - 10, பெரிய வெங்காயம் - 1, புளி - ஒரு நெல்லி அளவுஉப்பு - அரை டீஸ்பூன்வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன்வெந்தயம் - கால் டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய்வரமல்லிவெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்பெரிய வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணெயில் உப்புப் புளியோடு வதக்கவும்வெங்காயத்தை எடுத்தபின் அதே வாணலியில் சுத்தம் செய்து ஆய்ந்து கழுவிய புளிச்சகீரையை நன்கு பிரட்டி வதக்கவும்எல்லாவற்றையும் ஆறவைத்து மிக்ஸியில் முதலில் மிளகாய்வரமல்லி வெந்தயத்தைப் பொடித்து அதன் பின் வெங்காயம் கீரையைப் போட்டுக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்இதை ஒரு பௌலில் வழித்து எடுத்து வைக்கவும்அதன் மேல் எண்ணெயைக் காய்ச்சிக் கடுகு போட்டுப் பொரிந்ததும் ஊற்றவும்சுவையான கோங்குரா சட்னி தயார்இதை இட்லி தோசைசாதத்தோடு பரிமாறவும்.

திங்கள், 25 டிசம்பர், 2023

9.பைனாப்பிள் ரசம்

9.பைனாப்பிள் ரசம்


தேவையானவை:- பைனாப்பிள் – ஒரு துண்டு, பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 கப், புளி – ஒரு சுளை, உப்பு – அரை டீஸ்பூன், ரசப்பொடி அல்லது மிளகாய் – 1 மல்லி – சிறிது , சீரகம், மிளகு தலா அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்கவும். நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை.

செய்முறை:- ஒரு கப் பருப்புத் தண்ணீரில் பைனாப்பிளை வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும். மீதி பருப்புத் தண்ணீரில் ஒரு சுளை புளியைக் கரைத்து உப்பைப் போடவும். இதில் ரசப்பொடியைப் போட்டு நன்கு கரைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, கருவேப்பிலை தாளித்துப் புளி கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதி வரும்போது பைனாப்பிள் கரைத்த தண்ணீரை ஊற்றி நுரைத்ததும் இறக்கவும்..

புதன், 20 டிசம்பர், 2023

8.காலிஃப்ளவர் சொதி

8.காலிஃப்ளவர் சொதி



தேவையானவை:- காலிஃப்ளவர் சின்னம் - 1, பெரிய வெங்காயம் - 1,  தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 6, வரமல்லி - 1 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், தாளிக்க - எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, இலை, பூ, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.  கருவேப்பிலை - இணுக்கு , உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- காலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாகப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு வடிக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கீறிய பச்சைமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை வெதுப்பவும். இத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை இலை பூ, கிராம்பு, ஏலக்காய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவையும் போட்டுத் திறக்கவும். இத்துடன் காலிஃப்ளவரைச் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். இன்னும் ஐந்து நிமிடங்கள் வெந்ததும் பொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி இறக்கவும்.

செவ்வாய், 19 டிசம்பர், 2023

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி



தேவையானவை:- முருங்கைக்காய் - 2., 3 இன்ச் துண்டுகளாக நறுக்கவும், கத்திரிக்காய் - 4 குறுக்கே கிராசாக நறுக்கவும்., சின்ன வெங்காயம் - 8 உரித்து நெட்டாக நறுக்கவும்., பச்சை மிளகாய் - 2 . ரெண்டாக வகிரவும், வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு, வரமிளகாய் - 2 இரண்டாக கிள்ளிவும், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- ஒரு பானில் வெந்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக்காய்., கத்திரிக்காய்., சின்ன வெங்காயம்., பச்சைமிளகாய்., மஞ்சள் பொடி., சாம்பார் பொடி., பெருங்காயம் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் உப்புடன் கரைத்து காய்கள் வெந்ததும் சேர்க்கவும். 3 நிமிடம் கொதித்து சேர்ந்ததும் ஒரு இரும்புக் கரண்டியில் ( தாளித்துக் கொட்டும் கரண்டி) எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். தாளித்ததை பச்சடியில் கொட்டி சூடாக சாதத்தோடோ., தயிர்சாதத்தோடோ., இட்லி., தோசையோடோ பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...