எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 மார்ச், 2011

INDIAN PENNYWORT (VALLARAI ) SOUP.. வல்லாரை சூப்(பி)..


INDIAN PENNYWORT (VALLARAI) SOUP.:-
NEEDED:-
INDIAN PENNY WORT - 1 HANDFUL
ONION - 1 MEDIUM CHOPPED
TOMATO - 1 LARGE CHOPPED
GREEN CHILLY - 1 SLIT OPEN
BOILED THUVAR DHAL - 1 TBLSPN
TURMERIC POWDER - 1 PINCH.
SALT - 1 TSP
OIL - 2 TSP
ORID DHAL - 1/2 TSP
JEERA - 1/2 TSP
SOMPH - 1/2 TSP
PEPPER - 10 CORNS
CINNAMON - 1 INCH PIECE
CARDAMOM - 1 NO
BAY LEAF - 1 INCH PIECE
KALPASIP PUU - 1 INCH PIECE
CURRY AND CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.
MILK - 1 TBL SPN ( OPTIONAL)
MAGGI MASALA POWDER - 1 TSP ( OPTIONAL)

METHOD:-
WASH THE INDIN PENNYWORT AND KEEP ASIDE. HEAT OIL IN A PAN ADD ORID DHAL., JEERA., SOMPH., PEPPER CORNS., CINNAMON., BAY LEAF., CARDAMOM., KALPASIPPUU. THEN ADD THE ONION., TOMATO., CHILLY., CURRY AND CORRIANDER LEAVES., AND INDIAN PENNYWORT LEAVES. SAUTE FOR 1 MIN ADD THE SMASHED THUVAR DHAL ., TURMERIC POWDER., SALT. THEN ADD 3 CUPS OF WATER. BRING TO BOIL. SIMMER FOR 5 MINUTES.

IF DESIRES ADD MILK AND MAGGI MASALA POWDER.. IT ADDS THICKNESS AND AROMA. SERVE HOT WITH POTATO CHIPS.

PEOPLE OF CHETTINADU HAVE THIS SOUP AT 11 AM BEFORE MEALS.. THIS IS AN APPETISER TOO.. IT GIVES GOOD MEMORY POWER. ITS GOOD FOR CHILDREN., SICK PEOPLE AND AGED PEOPLE TOO.

வல்லாரை சூப்(பி):-
தேவையானவை:-
வல்லாரை - 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிர்ந்தது.
வேக வைத்த துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
பட்டை - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 1
இலை - 1 இன்ச் துண்டு
கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டு
கருவேப்பிலை கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.
பால் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
மாகி மசாலா பவுடர் - 1 டீஸ்பூன் (விரும்பினால்).

செய்முறை:-
வல்லாரையை நன்கு கழுவி வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., சோம்பு., மிளகு., பட்டை., ஏலக்காய்., இலை போடவும். பின்பு வெங்காயம்., தக்காளி., பச்சை மிளகாய்., கருவேப்பிலை கொத்துமல்லித்தழை., வல்லாரை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் பொடி ., உப்பு., மசித்த துவரம்பருப்பு போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றவும். கொதி வந்த பிறகு 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

விரும்பினால் பால் மற்றும் மாகி மசாலா பவுடர் சேர்க்கவும். இது திக்னெஸ் மற்றும் வாசனையை அதிகரிக்கும். உருளை சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.

செட்டிநாட்டு மக்கள் இதை பதினோரு மணிக்கு மதிய உணவுக்கு முன் அருந்துவார்கள். இது பசியை நன்கு தூண்டும். ஞாபகசக்திக்கும் நல்லது . இது குழந்தைகளுக்கும்., நோயாளிகளுக்கும்., வயதானோருக்கும் நல்லது.

4 கருத்துகள்:

  1. தேனு வல்லாரை கீரை இங்கு கிடைக்காது. நானும் எப்ப இந்தியா வந்தாலும் ட்ரை செய்து வெறுத்தே போச்சுங்க. கிடைத்த்தே இல்லை.
    அடுத்த முறையாவது சாப்பிட சான்ஸ் இருக்கா பார்க்கலாம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீது.

    நிச்சயம் வரலாம் சௌந்தர்..

    நிச்சயம் செய்து தருவேன் எங்க வீட்டுக்கு வாங்க விஜி..:)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...