எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2012

BEATEN RICE UPMA .அவல் உப்புமா

BEATEN RICE UPMA:-
NEEDED :-
BEATEN RICE - 1 CUP
WATER - TO WASH AND SOAK
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
RED CHILLY - 1 NO. HALVED
GREEN CHILLY - 1 NO. SLIT OPEN
BIG ONION - 1 NO. CHOPPED
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/4TSP.

METHOD:-
WASH THE BEATEN RICE. DRAIN AND KEEP ASIDE. THE WATER REMAINS IN IT IS ENOUGH FOR SOAKING. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD RED CHILLY, GREEN CHILLY, BIG ONION AND CURRY LEAVES. SAUTE FOR 2 MINUTES. ADD THE SOAKED BEATEN RICE WITH SALT. STIRR WELL FOR 2 MINUTES AND SERVE HOT AS A EVENING TIFFIN WITH COCONUT CHUTNEY OR IDLIE PODI.

அவல் உப்புமா:-
தேவையானவை :-
அவல் - 1 கப்
தண்ணீர் - அவலைக் கழுவ மற்றும் நனைக்கத் தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளவும்.
பச்சை மிளகாய் - 1 ரெண்டாக வகிரவும்.
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:-
அவலை தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். அதில் மிச்சமிருக்கும் தண்ணீரே அது ஊறப் போதுமானது. பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், வரமிளகாய், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் ஊறவைத்த அவலையும் உப்பையும் போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி சூடாக தேங்காய் சட்னி அல்லது இட்லிப் பொடியுடன் மாலை உணவாகப் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...