எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 ஜூன், 2021

கருவேப்பிலைப் பொடி & கருவேப்பிலை சாதம்.

கருவேப்பிலைப் பொடி & கருவேப்பிலை சாதம். 



தேவையானவை :- கருவேப்பிலை - ஒரு கப் , உளுந்தம் பருப்பு - அரை கப், வரமிளகாய் - 8, உப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு. எண்ணெய் - 2 டீஸ்பூன். சாதம் - 1 கப். 

செய்முறை:- தலா கால் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பைத் தவிர ஒவ்வொன்றாக வறுத்து எடுக்கவும். உப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். ஆறியதும் பொடி செய்யவும்.  இதை அப்படியே தோசை, இட்லி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம். 

சாதம் செய்ய :- சாதத்தை ஒரு பௌலில் போட்டு பொடியைத் தூவவும். மேலே ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றி நன்கு கிளறி வைத்து சிறிது நேரம் கழித்து பூந்தி தயிர்ப்பச்சடி, சிப்ஸ், வற்றல்களுடன் பரிமாறவும். 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...