எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 செப்டம்பர், 2021

28.ஹைதராபாதி கச்சி யெக்னி பீஃப் (மாட்டிறைச்சி) பிரியாணி

28.ஹைதராபாதி கச்சி யெக்னி பீஃப் (மாட்டிறைச்சி) பிரியாணி


தேவையானவை:- மாட்டிறைச்சி – 1 கிலோ, பாசுமதி அரிசி – 1 கிலோ, வெங்காயம் – 6, நெய் – 1 கப், எண்ணெய் – 1 கப், கரம்மசாலா – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,  உப்பு – 1 டேபிள் ஸ்பூன், ஜல் ஜீரா – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 10, கொத்துமல்லி புதினாத்தழை – 2 கைப்பிடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தயிர் – 250 மிலி, ரெட் ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், பட்டை -2, கிராம்பு, ஏலக்காய் – தலா 6, எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், நெய் – அரை கப்.

செய்முறை:- மாட்டிறைச்சியைக் கழுவி தண்ணீரை இறுக்கப் பிழிந்து ஒரு பெரிய தேக்ஸாவில் போடவும். ஆறு வெங்காயத்தையும் நீளமாக நறூக்கி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். மாட்டிறைச்சியில் உப்பு, மஞ்சள்தூள், பாதி கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு பட்டை, ஜல்ஜீரா, பொடியாக அரிந்த 8 பச்சை மிளகாய், பொடியாக அரிந்த புதினா கொத்துமல்லித்தழை, பட்டை ஒன்று, ஏலக்காய் 4, கிராம்பு 4  போட்டு வறுத்த வெங்காயத்தில் முக்கால் பங்கை நொறுக்கிப் போட்டுப் பிசையவும். பத்து நிமிடம் கழித்து தயிரையும் வறுத்த எண்ணெயில் பாதியையும் ஊற்றி நன்கு கிளறி கத்தியாலும் கரண்டியாலும் நன்கு குத்திப் பிசைந்து 2 மணி நேரம் ஊறவிடவும். அரிசியைக் களைந்து 20 நிமிடம் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு, பச்சை மிளகாய், புதினா கொத்துமல்லித்தழை, பட்டை கிராம்பு ஏலக்காய், கரம் மசாலாத்தூள் சேர்த்து அரிசியைப் போட்டு முக்கால் பதம் வேகவிடவும். வெந்ததும் வடித்து தேக்ஸாவில் இருக்கும் மாட்டிறைச்சிமேல் போடவும். அதன் மேல் வறுத்த வெங்காயத்தைப் போட்டுக் கால் கப் நீரில் கரைத்து ரெட் ஃபுட் கலரை ஊற்றவும். அதன் மேல் புதினா கொத்துமல்லித்தழைகள், வெங்காயம் வறுத்த எண்ணெயில் மீதி, அரை கப் நெய் போட்டு தேக்ஸாவை அடுப்பில் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் அடுப்பில் நெருப்பில் வைத்து இறக்கவும்.  அதன் பின் தோசைக்கல் ஒன்றை அடுப்பில் வைத்து தேக்ஸாவை அதன் மேல் வைக்கவும். ஹை ஃப்ளேமில் இரண்டு நிமிடங்கள் வைத்துவிட்டு அதன் பின் அடுப்பை சிம்மில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து இறக்கவும். மேலாகக் கரண்டியைக் கொடுத்துப் பதமாக எடுத்துப் பைனாப்பிள் ரெய்த்தா, வெள்ளரிப் பச்சடியுடன் பரிமாறவும். 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...