எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 செப்டம்பர், 2022

10. பிடிகருணை மசியல்

10. பிடிகருணை மசியல்.


 

தேவையானவை :- கருணைக்கிழங்கு – கால் கிலோபச்சை மிளகாய் – 4, புளி - 1 நெல்லி அளவுமஞ்சள் தூள் – 1 சிட்டிகைபெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்உப்பு – அரை டீஸ்பூன்தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – ஒரு டீஸ்பூன்சோம்பு - கால் டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்குஎண்ணெய் – 4 டீஸ்பூன்.


 

செய்முறை :- கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் வேகப்போட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்எண்ணெயைக் காயவைத்து கடுகு  போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்,  கருவேப்பிலை போட்டு பச்சை மிளகாய்களை நான்காக கீறிப்போடவும்லேசாக வதங்கியதும் பெரியவெங்காயத்தை தண்ணீர் போல வதக்கவும்இதில் உப்பு , மஞ்சள் பொடி போட்டு மசித்த கருணையைப் போடவும்உப்பு புளியை அரை கப் நீரில் நன்கு கரைத்து ஊற்றவும்அடிக்கடிக் கிளறிவிட்டு நன்கு  சுருண்டு வரும்போது  இறக்கவும்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...