எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2026

பாற்சோறு

பாற்சோறு


தேவையானவை :- பச்சரிசி -  1 கப், வெல்லம்+கருப்பட்டி - 2 கப், தேங்காய்  ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்., தண்ணீர் - 4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப  அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி  கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும்  தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும். இது 2 நாளைக்கு கெடாது. சூடாகவோ , குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...