எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ATCHAYA THRITHIYAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ATCHAYA THRITHIYAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மே, 2016

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் . ATCHAYA THRITHIYAI RECIPES.

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள் :-

1.மலாய் சம்சம்
2.சந்தேஷ்
3.தஹி குஜியா
4.ஸ்டஃப்ட் குல்சா
5.பட்டர் குக்கீஸ்
6.தயிர் சேமியா
7.தேங்காய் சேவை
8.ட்ரை கலர் பனீர் டிக்கா.
9.தேங்காய் சம்பல்
10.அரிசிப் பாயாசம்

1.மலாய் சம்சம்

தேவையானவை :-
பனீர் – 2 கப், சர்க்கரை – 2 கப், தண்ணீர் – 5 கப், குங்குமப்பூ – 2 சிட்டிகை. மலாய் செய்ய :- பால் 2 கப், சர்க்கரை – 2 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பிஸ்தா, பாதாம் – தலா 10.

செய்முறை:-
பனீரை உதிர்த்து நன்கு மென்மையாகப் பிசைந்து ஓவல் வடிவத்தில் உருட்டவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு நன்கு கொதிக்க விடவும். பாகு பதம் வந்ததும் உருட்டி வைத்த பனீரை மெதுவாகப் போட்டு நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து தீயைக் குறைத்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது பனீர் இருமடங்காக உப்பி வெந்திருக்கும். திரும்ப மூடியைத் திறந்து கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும். மலாய் செய்ய பாலைக் கொதிக்க விடவும். பாதியாகக் குறுகியதும் சீனியைப் போட்டு நன்கு சுண்டியதும் ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். பனீர் ஆறியதும் இரண்டாக வெட்டி மலாயை வைத்துப் பொடியாக அரிந்த பாதாம் பிஸ்தா குங்குமப்பூவைத் தூவி மடித்துப் பரிமாறவும்.


திங்கள், 11 மே, 2015

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் .ATCHAYA THRITHIYAI RECIPES.



அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் :-


1.ரஸகுல்லா
2.ரஸ்மலாய்
3.தூத் பேடா.
4.தேங்காய் அல்வா
5.பால் பணியாரம்
6.வெள்ளைப் பணியாரம்.
7.பால் பாயாசம்.
8.பகாளா பாத் 
9.குழாய்ப் புட்டு.


1.ரஸகுல்லா :-

தேவையானவை :-
பால் – 1 லிட்டர்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அட்சய திரிதியை சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் நிவேதனம். ATCHAYA THRITHIYAI, CHITHRA PAURNAMI RECIPES

ஏப்ரல் 15 - 31, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்த சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

1. கல்கண்டு பால் சாதம்.
தேவையானவை :-
பச்சரிசி - 1 ஆழாக்கு.
பால் - 1 லிட்டர்
உப்பு - 1 சிட்டிகை
கல்கண்டு  -100 கிராம்

செய்முறை:-
பாலைக் காய்ச்சவும். பொங்கி வரும்போது பச்சரிசியைக் களைந்து சேர்க்கவும். கொதி வந்ததும் சிம்மில் வைத்து சாதம் குழையும் வரை வேக விடவும். துடுப்பால் ( மரக் குச்சி ) தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும். குழைந்த சாதத்தில் ஒரு சிட்டிகை உப்பையும் பொடித்த கல்கண்டையும் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவிடவும். நிவேதனம் செய்யவும். இது அட்சய திரிதியை ஸ்பெஷல்

2. டயர் முறுக்கு :-
பச்சரிசி - 4 ஆழாக்கு
வெள்ளை உருண்டை உளுந்து - 1 1/2 ஆழாக்கு
உப்பு - 10 மிலி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.
Related Posts Plugin for WordPress, Blogger...