எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 அக்டோபர், 2019

5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை

5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை

தேவையானவை :- இட்லி அரிசி – 2 கப், தேங்காய் – 1, வெல்லம் – 300 கி, ஏலக்காய் – 4.
செய்முறை:- இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் இருந்தால் இஞ்சுவதற்காக அதை ஒரு சுத்தமான வெண்துணியில் கட்டி வைக்கவும். தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். அதன் பின் இருமுறை ஒரு கப் தண்ணீர் விட்டுப் பால் எடுத்து வைக்கவும். மூன்றாம் பாலில் வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இரண்டாம் பாலைப் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிவரும்போது அரைத்த மாவை சீடைக்காய் அளவில் கொழுக்கட்டைகளாகத் தட்டிப் போடவும். பாதி வேகும்போது வெல்லம்சேர்த்த தண்ணீரையும் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து கொழுக்கட்டைகள் வெந்ததும் முதல் பாலை ஊற்றி ஏலப்பொடி போட்டு இறக்கி நிவேதிக்கவும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...