எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 அக்டோபர், 2019

4.அட்சய திருதியை – பூந்தி கீர்

4.அட்சய திருதியை – பூந்தி கீர்

தேவையானவை:- கடலைமாவு – 1 டேபிள் ஸ்பூன், மைதா – 1 டீஸ்பூன், சோளமாவு – 2 டீஸ்பூன், அரிசிமாவு – 2 டீஸ்பூன். சோடா உப்பு – 1 சிட்டிகை., உப்பு – 1 சிட்டிகை. பால் – ஒரு லிட்டர், சீனி – கால் கப், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், முந்திரி பாதாம் – தலா 5, கிஸ்மிஸ் – 10, நெய் – 2 டீஸ்பூன். பூந்தி பொறிக்கத் தேவையான எண்ணெய். வனிலா எசென்ஸ் – சிலதுளிகள்.
செய்முறை:- கடலைமாவு, மைதா, சோளமாவு, அரிசிமாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உப்பும், சோடா உப்பும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து பூந்திகளாக வேகவைத்து எடுக்கவும். பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து பதினைந்து நிமிடம் சிம்மில் கொதிக்க விடவும். இதில் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, கிஸ்மிஸை சேர்த்து ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பூந்தியும் வனிலா எஸென்ஸும் சேர்த்து நிவேதிக்கவும்.

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...