எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 அக்டோபர், 2019

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

தேவையானவை:- பச்சரிசி – 3 கப், தூள் வெல்லம் – 100 கி , அச்சு வெல்லம் – 100 கி, மண்டை வெல்லம் – 100 கி. நெய் – 1 டேபிள் ஸ்பூன், திரி.
செய்முறை:- மூன்று கப் பச்சரிசியையும் ஒவ்வொரு கப்பாக எடுத்துக் களைந்து தனித்தனியாக ஊறவைக்கவும்.
அரியரிசி:- ஒரு கப் ஊறவைத்த அரிசியை அரித்து எடுத்துத் தூள் வெல்லம் கலந்து நிவேதிக்கவும்.
துள்ளுமா:- இன்னொரு கப் ஊறவைத்த அரிசியை எடுத்து பெரபெரவென உரலில் இடித்தோ மிக்ஸியில் அரைத்தோ வைக்கவும். இதில் அச்சுவெல்லத்தைத் தூள் செய்து ஒரு சுற்றுச் சுற்றிநிவேதிக்கவும். (உரலில் போட்டு இடிக்கும்போது குருணையுடன் துள்ளி விழும் என்பதால் இது துள்ளுமா.)
மாவிளக்கு :- மூன்றாவதாக ஒரு கப் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவி மாவுடன் மிக்ஸியில் போட்டுச் சுற்றி எடுத்து உருண்டையாகக் கைகளால் உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு நெய் ஊற்றி மாவிளக்கை ஏற்றி நிவேதிக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...