எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துள்ளுமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துள்ளுமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 அக்டோபர், 2019

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

தேவையானவை:- பச்சரிசி – 3 கப், தூள் வெல்லம் – 100 கி , அச்சு வெல்லம் – 100 கி, மண்டை வெல்லம் – 100 கி. நெய் – 1 டேபிள் ஸ்பூன், திரி.
செய்முறை:- மூன்று கப் பச்சரிசியையும் ஒவ்வொரு கப்பாக எடுத்துக் களைந்து தனித்தனியாக ஊறவைக்கவும்.
அரியரிசி:- ஒரு கப் ஊறவைத்த அரிசியை அரித்து எடுத்துத் தூள் வெல்லம் கலந்து நிவேதிக்கவும்.
துள்ளுமா:- இன்னொரு கப் ஊறவைத்த அரிசியை எடுத்து பெரபெரவென உரலில் இடித்தோ மிக்ஸியில் அரைத்தோ வைக்கவும். இதில் அச்சுவெல்லத்தைத் தூள் செய்து ஒரு சுற்றுச் சுற்றிநிவேதிக்கவும். (உரலில் போட்டு இடிக்கும்போது குருணையுடன் துள்ளி விழும் என்பதால் இது துள்ளுமா.)
மாவிளக்கு :- மூன்றாவதாக ஒரு கப் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவி மாவுடன் மிக்ஸியில் போட்டுச் சுற்றி எடுத்து உருண்டையாகக் கைகளால் உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு நெய் ஊற்றி மாவிளக்கை ஏற்றி நிவேதிக்கவும்.

வியாழன், 9 அக்டோபர், 2014

வைகாசி விசாகம் ஸ்பெஷல் நிவேதனம். VAIKASI VISAKAM RECIPES

ஜூன் 1 - 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்த நிவேதனங்கள் வெளிவந்துள்ளன.

வேங்கரிசி மாவு பற்றி வாசகர் கடிதம். !!!!!!!! நன்றி கவிதா நெல்வாய்.


1. தினை அரிசி மாவுருண்டை:-

தேவையானவை :-
தினை அரிசி – 2 ஆழாக்கு
வெல்லம் – 1 கப்
தேன் - அரை கப்
        நெய் - அரை கப்
        ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
தினை அரிசியைச் சுத்தம் செய்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். (இன்னொரு விதத்தில் ஊறவைத்து வடிகட்டி இடித்துச் )சலித்து அதோடு நெய்யைக் காய்ச்சி ஊற்றி வெல்லத்தைத் தூள் செய்து தேன், ஏலக்காய் கலந்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொடுக்கவும்.

2. கம்பு பொரியரிசி மாவு :-

தேவையானவை:-
கம்பு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை - 1/3ஆழாக்கு அல்லது
ஜீனி - 1/3 கப்.


Related Posts Plugin for WordPress, Blogger...