எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 நவம்பர், 2019

17.ஐப்பசி பௌர்ணமி – காய்கறி சாதம்

17.ஐப்பசி பௌர்ணமி – காய்கறி சாதம்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பொடியாக அரிந்த காரட், உருளை, பீட்ரூட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் கலந்து - 2 கப், வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகாய் சோம்புத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1 துண்டு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- பச்சரிசியை சிறிது எண்ணெயும் உப்பும் விட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து கடலைப்பருப்பைப் போட்டுத் தாளித்து பட்டை சேர்க்கவும். கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பொடியாக அரிந்த காய்கறிக் கலவையையையும் போட்டு நன்கு வதக்கி உப்பும் மிளகாய் சோம்புத்தூளையும் சேர்க்கவும். நன்கு சுருள வதங்கியதும் இறக்கி வைத்து ஆறிய சாதத்தைப் போட்டுக்  கிளறி நிவேதிக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...