எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2019

21. கந்தர் சஷ்டி – கந்தரப்பம்

21. கந்தர் சஷ்டி – கந்தரப்பம்

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கைப்பிடி, வெல்லம் – 200 கிராம், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4, எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.
செய்முறை:- பச்சரிசி, உளுந்து, வெந்தயம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு அனைத்தையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இதை கிரைண்டரில் போட்டு அரைத்து முக்கால் பதம் அரைத்ததும் வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்து தேங்காய்துருவலையும் சேர்க்கவும். நன்கு அரைந்ததும் மாவை வழித்து ஏலக்காயை ஒரு ஸ்பூன் சீனியுடன் தோலோடு பொடி செய்து சேர்க்கவும் . எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்து நிவேதிக்கவும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...