எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 நவம்பர், 2019

15.காரடையான் நோன்பு – வெல்ல அடை

15.காரடையான் நோன்பு – வெல்ல அடை

தேவையானவை:- பச்சரிசி – ஒருகப், வெல்லம் – 1 கப், காராமணி – கால் கப், தேங்காய்ப் பல் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை
செய்முறை :- பச்சரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். காராமணியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து வைக்கவும். ஒரு கப் வெல்லத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவிடவும். கரைந்ததும் காராமணியைப் போட்டு இரு நிமிடம் வேகவைத்து அதில் அரிசிமாவையும் போட்டுக் கிளறவும். நன்கு உருண்டு பந்து போலானதும் இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து உள்ளங்கையில் தட்டி வடை போல் துளை செய்து ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...