எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 மே, 2020

அப்பம்.

அப்பம்

தேவையானவை :- பச்சரிசி - 1 கப் ( தலை தட்டி ),  உளுந்து -அதன் மேல் கோபுரமாக, வெந்தயம் -1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 அச்சு, ஏலக்காய் - 2, எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- பச்சரிசி, உளுந்து, வெந்தயம், கடலைப்பருப்பைக் கலந்து, களைந்து இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்து வழித்தெடுக்கவும். ஏலக்காயை அரை டீஸ்பூன் ஜீனியோடு வைத்துப் பொடித்துத் தோலோடு மாவில் சேர்த்து நன்கு கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பெரிய கரண்டியில் மாவை ஊற்றித் திருப்பிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...