எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2020

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி :-


தேவையானவை :- பாசுமதி அரிசி - 2 கப், மட்டன் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், அரைக்க :- பச்சை மிளகாய் - 3, சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பட்டை , கிராம்பு, ஏலக்காய் - 1 துண்டு, புதினா கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன் , தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன். எலுமிச்சை  - அரை மூடி. மீளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - ஒரு டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை , பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு - தலா ஒன்று. கிராம்பு, ஏலக்காய் - தலா 2. புதினா கொத்துமல்லித்தழைகள் - பொடியாக அரிந்தது இரு கைப்பிடிகள். 

செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கழுவி வைக்கவும். வெங்காயத்தை நீளமாக அரியவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ மராட்டிமொக்கு, தாளித்து வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும். இதில் பச்சை மிளகாய் , இஞ்சிபூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து மட்டனைச் சேர்க்கவும். மட்டனைப் போட்டு நன்கு திறக்கி மஞ்சள்தூள் மல்லித்தூள், மிளகாய்த்தூள் போடவும். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கிக் குழைய விடவும். அதன் பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு  வதக்கி கால் கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும். வெந்ததும் குக்கரைத் திறந்து அரிசி, உப்பு, புதினா கொத்துமல்லித்தழைகளைச் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு விசில் வைத்து இறக்கவும். எலுமிச்சை பிழிந்து கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து சிப்ஸ், வெங்காயத்தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும். 


  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...