எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 பிப்ரவரி, 2021

பூசணிக்காய் மோர்க்குழம்பு

பூசணிக்காய் மோர்க்குழம்பு.


தேவையானவை:- பூசணிக்காய் - 1 கீத்து, தேங்காய் - அரை மூடி, பச்சைமிளகாய் - 3, சீரகம் - 1 டீஸ்பூன், பச்சரிசி, கடலைப்பருப்பு - தலா அரைடீஸ்பூன் ( ஊறவைக்கவும் ). தயிர் - 1 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், சீரகம் -தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை:- பூசணிக்காயைத் தோல் சீவித் துண்டுகள் செய்து கழுவி வேகப் போடவும். அத்தோடு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம், ஊறவைத்த பச்சரிசி , கடலைப்பருப்பு ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் இவற்றைப் போட்டுக் கிளறிவிடவும். லேசாகப் பொங்கி நுரைத்து வரும்போது தயிரைக் கடைந்து ஊற்றி உப்புச் சேர்த்து இறக்கி நன்கு கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை தாளித்து சூடான சாதத்தோடு பரிமாறவும். இதற்கு வாழைப்பூ உசிலி நன்றாக இருக்கும். 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...