எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

பச்சை மிளகாய் போட்ட இட்லி சாம்பார்

பச்சை மிளகாய் போட்ட இட்லி சாம்பார்.



தேவையானவை.:-

முருங்கைக்காய்  - 1
கத்திரிக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1 ( சின்னம்) 
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 8
வேகவைத்த துவரம் பருப்பு -1 கப்
புளி -  2 சுளை. 
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-


முருங்கைக்காயை 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.  ப்ரஷர் பானில் வெந்த பருப்புடன் இவற்றைப் போட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, இரண்டாக வகிர்ந்த பச்சைமிளகாயைச் சேர்த்து ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். . ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடன்  பரிமாறவும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...