எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2020

மாவடு இஞ்சி/மாங்காய் இஞ்சி மண்டி

மாவடு இஞ்சி/மாவடு இஞ்சி மண்டி. 


தேவையானவை:- மாவடு இஞ்சி - 100 கிராம், சி. வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 15, பச்சை மிளகாய் - 6, திக்கான அரிசி களைந்த தண்ணீர் - 2 கப், புளி - நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து . வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம்- ஒரு துண்டு. கருவேப்பிலை -  1 இணுக்கு.

செய்முறை:- மாவடு இஞ்சியைத் தோல் சீவி நைசாக அரிந்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த தண்ணீரில் உப்புப் புளியைப் போட்டுக் கரைத்துச் சாறெடுத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து வெந்தயம் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மாவடு இஞ்சி போட்டு லேசாக வதக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். அரிசி களைந்த தண்ணீர் திக்காக இல்லை என்றால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி, ஒரு துண்டு பெருங்காயம், கால் டீஸ்பூன் வெந்தயத்தைப் பொடித்துப் போடவும். மண்டி சுண்டியதும் இறக்கவும். இது தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...