எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

மொச்சை மண்டி.

மொச்சை மண்டி. 


தேவையானவை:- மொச்சை - 1 கப், அரிசி களைந்த கெட்டிக் கழுநீர்/மண்டி -2 கப், வெண்டைக்காய் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 8 பல் , பச்சை மிளகாய் - 10, தக்காளி - சின்னம் 1, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. கருவேப்பிலை - 1 இணுக்கு. 

மண்டிப் பொடி :- ஒரு டீஸ்பூன் பச்சரிசி கால் டீஸ்பூன் வெந்தயம், நகக்கண் அளவு பெருங்காயத்தை வறுத்து நுணுக்கி வைக்கவும். 

செய்முறை:-  மொச்சையை முதல்நாளே ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். வெண்டைக்காய், வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து துண்டுகளாக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தம் தாளித்துப் பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு, வெண்டிக்காயைப் போட்டு வதக்கவும். அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறப்போட்டுக் கரைத்து ஊற்றவும். இவை எல்லாம் கொதித்து வரும்போது மொச்சையைச் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் பத்து நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கொதித்துக் காரமும் உப்பும் மொச்சையில் சார்ந்ததும் மண்டிப் பொடியைப் போட்டு இன்னும் ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கவும். இது சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். தயிர்சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...