எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 செப்டம்பர், 2020

காலிஃப்ளவர் சொதி.

காலிஃப்ளவர் சொதி. 


தேவையானவை:- காலிஃப்ளவர் சின்னம் - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 6, வரமல்லி - 1 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், தாளிக்க - எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, இலை, பூ, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.  கருவேப்பிலை - இணுக்கு , உப்பு - 1 டீஸ்பூன். 

செய்முறை:- காலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாகப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு வடிக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கீறிய பச்சைமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை வெதுப்பவும். இத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து வைக்கவும். 

கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை இலை பூ, கிராம்பு, ஏலக்காய் போட்டு அதில் வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும். கருவேப்பிலை சேர்த்து அரைத்த மசாலாவையும் போட்டுத் திறக்கவும். இத்துடன் காலிஃப்ளவரைச் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். இன்னும் ஐந்து நிமிடங்கள் வெந்ததும் பொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி இறக்கவும். இது சாதம் தோசை, சப்பாத்தி இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...