எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2020

முட்டை குருமா

முட்டை குருமா:-


தேவையானவை:- முட்டை - 4 , பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1, தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், சின்னவெங்காயம் - 1, பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, கசகசா - 1 டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை , கல்பாசிப்பூ - எல்லாம் சிறிது.

செய்முறை:- முட்டைகளை 7 நிமிடம் அவியவைத்துத் தோலுரித்து வைக்கவும். வெங்காயம் தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், பச்சைமிளகாய், மிளகு, பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கசகசா, உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை, கல்பாசிப்பூ போட்டுத் தாளிக்கவும். இதில் வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து 3 கப் நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். குருமா கொதி வரும்போது முட்டைகளை வகிர்ந்து போடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும். இதை சப்பாத்தி, பூரி, பரோட்டா, சாதம் ஆகியவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...