எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பாசிப்பருப்புப் பணியாரம்

பாசிப்பருப்புப் பணியாரம்


பொதுவாக இதைக் கருப்பட்டிப் பணியார மாவில் ( பிள்ளையார் நோன்புக்கு இழை எடுத்தது போக மிச்சத்தைக் கருப்பட்டிப் பணியாரமாக ஊற்றுவோம். அன்றைக்கு ஒரு பகுதி கருப்பட்டிப் பணியார மாவை மிச்சம் வைத்து அதன் பின் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு இம்மாவில் பாசிப்பருப்பை வேகவைத்துப் போட்டுக் கலந்து பாசிப்பருப்புப் பணியாரமாக ஊற்றுவோம். ) 

தேவையானவை:- பச்சரிசி -2 கப், வெல்லம் + கருப்பட்டி - 200 கி, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. பாசிப்பருப்பு - கால் கப் 

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம்  ஊறவைத்து வடிகட்டி நிழலில் போடவும். பத்து நிமிடம் கழித்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். ஒரு கட்டி வெல்லத்தோடு கருப்பட்டியையு நைத்துப் போட்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றிக் கரைய விடவும். வெல்லமும் கருப்பட்டியும் கரைந்ததும் மாவில் வடிகட்டி ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி நன்கு பிசைந்து உருட்டி வைக்கவும். 

மறுநாள் எண்ணெயைக் காயவைத்து மாவைக் கரைத்துப் பணியாரங்களாக ஊற்றி நிவேதிக்கவும். எண்ணையோடு சிறிது நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஊற்றலாம். மிகவும் ருசியாக  இருக்கும். இது பிள்ளையார் நோன்பு ஸ்பெஷல் பணியாரம். இரத்த விருத்தி தரும். இரும்புச் சத்து உள்ளது. 

இந்த மாவில் பாசிப்பருப்பை வேகவைத்து மசித்துக் கலந்து பணியாரங்களாக ஊற்றி எடுத்தால் அது பாசிப்பருப்புப் பணியாரம். 
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...