எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 டிசம்பர், 2022

துவரம்பருப்பு தோசை:-

துவரம்பருப்பு தோசை:-


தேவையானவை :- துவரம் பருப்பு – அரை கப், பச்சரிசி +புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன்,. உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி, பொடியாக அரிந்த வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து தனியாக ஊறவைக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசி , உளுந்தை வெந்தயத்தோடு களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் அரிசி உளுந்தை அரைத்து அதன்பின் துவரம் பருப்பைச் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைக்கவும். 4 மணி நேரம் கழித்து வெங்காயம் சேர்த்துக் கரைத்து தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி காரச் சட்னியோடு பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...