எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஜனவரி, 2024

2.கேரட் சேமியா கேசரி

2.கேரட் சேமியா கேசரி


 

தேவையானவை:- கேரட் – 200 கி, சேமியா – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 1 ¼ கப், தண்ணீர் – 3 கப், நெய் – 3 டேபிள் ஸ்பூன், முந்திரி – 1, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.

 

செய்முறை:- கேரட்டைத் தோல் சீவித் துருவவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். அதில் பாதி நெய்யில் துருவிய கேரட்டைப் போட்டுப் பச்சை வாசம் போக நன்கு வதக்கவும். அதன் பின் மீதி நெய்யை விட்டு சேமியாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து அதன் மேல் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றவும். இதோடு வதக்கிய கேரட்டையும் சேர்க்கவும். கேரட்டும் சேமியாவும் நன்கு வெந்ததும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். கேசரி சுருண்டு நெய் பிரியும்போது ஏலப்பொடியையும் முந்திரியையும் தூவிப் பரிமாறவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...