எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

18.மோரு கறி

18.மோரு கறி


தேவையானவை:- தயிர் – 1 கப், சின்ன வெங்காயம் – அரிந்தது ஒருகைப்பிடி, இஞ்சி, பூண்டு தலா அரை இஞ்ச் – பொடியாக நறுக்கவும். கருவேப்பிலை – இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு –அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன் வரமிளகாய் – 2.

செய்முறை:- தயிரைக் கடைந்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். இதில் வரமிளகாய், கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கித் தயிரைச் சேர்க்கவும். லேசாக நுரைத்து வந்ததும் இறக்கவும். சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...