எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 ஜனவரி, 2024

20.பலகாய் மண்டி.

20.பலகாய் மண்டி.



தேவையானவை:- நாட்டுக் காய்கள் - முருங்கைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, வாழைக்காய் - பாதிஉருளைக்கிழங்கு - சின்னம் ஒன்று, (மாவத்தல் - 8 , அவரைவத்தல் - 6, தட்டைப்பயிறு - அரை கப்  இது மூன்றையும் வேகவைத்து வைக்கவும்.) பச்சைமிளகாய் - 8, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, அரிசி களைந்த திக் தண்ணீர் - 2 கப்உப்பு - அரை டீஸ்பூன்புளி - 4 சுளைஎண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்கடுகு - அரை டீஸ்பூன்உளுந்து - அரை டீஸ்பூன்பெருங்காயம் - 1 துண்டுகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறவைக்கவும்காய்கறிகளை இரண்டு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும்பச்சைமிளகாயையும் ஒரு இஞ்ச் துண்டாக நறுக்கவும்எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்துபெருங்காயம் தாளித்து கருவேப்பிலை பச்சைமிளகாயைச் சேர்க்கவும்லேசாக வதங்கியதும் வெங்காயம் பூண்டுகாய்களைச் சேர்த்து இன்னும் சில நிமிடம் வதக்கவும்.இதில் உப்புப் புளியை மண்டியோடு கரைத்து ஊற்றவும்கொதி வந்ததும் மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேக வைக்கவும்கடைசியாக வேகவைத்த மாவத்தல் கத்திரிவத்தல்தட்டைப்பயறு போட்டு இன்னும் சில நிமிடம் வேகவைத்து இறக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...