எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
RASAMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RASAMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மார்ச், 2015

சூப்ஸ் & ரசம்ஸ், SOUPS & RASAMS

சூப்ஸ் & ரசம்ஸ் :-


குளிர் முடிந்து வெய்யில் ஆரம்பிக்கும் நேரம் மாசி மாதம். இந்த மாதங்களில் சீதளம் என்னும் குளிர்ச்சியும் குளிர் காரணமாக உடல் நோவும் ஏற்படும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க மூச்சுப் பயிற்சி ப்ரணாயாமம் போன்றவை செய்வது நல்லது.குளிர் காரணமா அடிக்கடி தண்ணீர் குடிக்க மாட்டாங்க பசங்களும் பெரியவங்களுமே. இந்த சூப் & ரசம் வகையறாஸ் நாவரட்சி போக்கி நீர்ச்சத்தை அளிக்கும்.

இந்தப் பருவத்தில் சூடாக ரசம், சூப் வைத்து அருந்தினால் உடலில் சள்ளைக்கடுப்பு, சளி, அசதி ஆகியவற்றைப் போக்கி சுறுசுறுப்பூட்டும். தெம்பு கொடுக்கும். எனவே இந்தப் பின்பனிக்காலத்தில் சில பாரம்பர்ய மற்றும் நவீன ரசம் & சூப்புகள் செய்து அருந்துங்கள். குளிரை விரட்டுங்க. க்ளைமேட்டைக் கொண்டாடுங்க. J


1.தூதுவளை ரசம்.

தேவையானவை :-
தூதுவளை – 1 கட்டு
வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
உப்பு – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
மல்லித்தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
பூண்டுப்பல் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

Related Posts Plugin for WordPress, Blogger...