எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 அக்டோபர், 2016

நவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.

நவதானிய மிக்ஸர்.

தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி, வறுத்த உப்புக் கொண்டக்கடலை – ஒரு கைப்பிடி, ஊறவைத்து வறுத்த பச்சைப் பட்டாணி -1 கைப்பிடி, ஊறவைத்து வறுத்த காராமணி – 1 கைப்பிடி, ஊறவைத்து வறுத்த பச்சைப் பயறு -1 கைப்பிடி, வறுத்த வேர்க்கடலை -1 கைப்பிடி, உப்பு –அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி. நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து ஒரு பௌலில் போடவும். பிஸ்தாவையும் பரங்கி விதையையும் வெறும் வாணலியில் உப்புத் தண்ணீர் தெளித்து வறுத்து எடுத்து அதில் போடவும். உப்புக் கொண்டைக்கடலையைத் தோல் நீக்கிச் சேர்க்கவும். வறுத்த காராமணி, பச்சைப்பயிறு, பட்டாணி, வேர்க்கடலை சேர்த்துக் கலந்து  வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கருவேப்பிலையைப் பொறித்து அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து இந்த மிக்ஸரைக் கொட்டி அடுப்பை அணைத்து நன்கு கிளறி நிவேதிக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...