எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 அக்டோபர், 2016

நவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.

நவதானியப் பாயாசம்

தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால் கப். பால் – ஒன்றரை லிட்டர், சர்க்கரை – முக்கால் கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி -1 சிட்டிகை, நெய்- 2 டீஸ்பூன்.

செய்முறை:- தினை சாமை வரகு ராகி கம்பு பார்லி தட்டைப்பயிறு, சோளம், சிவப்புக்கைக்குத்தல் அரிசி ஆகியவற்றைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் லேசாக வாசம் வருவரை வறுத்து மிஷினில் நன்கு நைஸாக அரைத்து வைக்கவும். இதில் ஒரு கப் மாவு எடுத்து இரண்டு டம்ளர் பாலில் கரைத்து இன்னொரு டம்ளர் பால் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்து மாவு ஒட்டாத பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து மிச்ச பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும். ஏலப்பொடி தூவி நிவேதிக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...