எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

சேவ் சோளாஃபலி - SEV CHORAFALI

சேவ் சோளாஃபலி:-

தேவையானவை:- கடலை மாவு – 1 கப், உளுந்து மாவு – கால் கப், பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, எண்ணெய் – 1 டீஸ்பூன் , பொறிக்கத் தேவையான அளவு, உப்பு – அரை டீஸ்பூன், தண்ணீர் – கால் கப், வரமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கருப்பு உப்பு – 1 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் – 2 டீஸ்பூன். சிறு சில்வர் உரல் + உலக்கை செட் – 1

செய்முறை:- கால் கப் தண்ணீரை சுடவைத்து உப்பு எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். கடலை மாவு உளுந்த மாவு பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலந்து வைக்கவும் இதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். இதை உரலில் சிறிது எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடித்து மென்மையாக கலர் வெளிராக மாறும்வரை இடித்து வைக்கவும். பூரியாகத் தேய்த்து செவ்வகமாக ரிப்பன் போல வெட்டி எண்ணெயில் பொரிக்கவும். கறுப்பு உப்பு,  ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூளை நன்கு கலந்து இதில் தூவி பரிமாறவும்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...