எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2017

சீரகசம்பா கல்கண்டுப் பொங்கல் - SEERAGASAMBA KALKANDU PONGAL.

சிவன்


சீரகசம்பா கல்கண்டுப் பொங்கல்.

தேவையானவை:- சீரகச் சம்பா அரிசி – 1 கப். பால் – 1 கப், கல்கண்டு – முக்கால் கப், நெய்- அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 20.

செய்முறை:- சீரகச்சம்பா அரிசியைக் களைந்து சிறிது நெய்யில் வறுத்து ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். இறக்கி நன்கு மசித்து கற்கண்டைப் பொடியாக்கிச் சேர்க்கவும். கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஏலத்தூள் போட்டு மிச்ச நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு நிவேதிக்கவும்.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...