எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 நவம்பர், 2020

பருப்புச் சட்னி ( பருப்பரைச்சுக் கொதிக்க வைத்தல் )

பருப்புச் சட்னி ( பருப்பரைச்சுக் கொதிக்க வைத்தல் ) 



தேவையானவை:- துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3 ( சோம்பு, சீரகம் விரும்பினால் சிறிது ) பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, புளி 1 சுளை, உப்பு - அரை டீஸ்பூன் தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து வரமிளகாய், சோம்பு சீரகத்துடன் மைய அரைக்கவும். பெரியவெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து சிவந்ததும் வெங்காயம் தக்காளியை வதக்கி ஒரு கப் தண்ணீரில் உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். இதிலேயே அரைத்த விழுதையும் சேர்த்து இன்னும் அரை கப் நீரூற்றிக் கொதித்து வெந்ததும் இறக்கவும். இது இட்லிதோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குருணை அல்லது கேப்பைக் களி செய்தால் இதோடு மாவத்தலையும் ஊறவைத்துச் சேர்த்து வேகவைத்துப் பருப்பரைத்துக் கொதிக்க வைப்போம். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...