எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

கருணைக்கிழங்கு மசியல் ( பிடிகருணை)

கருணைக்கிழங்கு மசியல் ( பிடிகருணை) 


தேவையானவை :- கருணைக்கிழங்கு - 3, சின்ன வெங்காயம் -15 பொடியாக நறுக்கவும். பூண்டு - 10 பொடியாக நறுக்கவும். சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- கருணைக்கிழங்கை நன்கு கழுவிக் குக்கரில் இரண்டு விசில் வேகப்போடவும். வெந்ததும் தோலுரித்து மசித்து வைக்கவும். புளியை அரை கப் நீரில் கரைத்து மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு கருணைக்கிழங்கையும் போட்டுப் பிசைந்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் பூண்டைப் போட்டு இரு நிமிடங்கள் வதக்கவும். இதில் கருணைக்கிழங்கு மசியலைப் போட்டு நன்கு கிளறவும். தீயைக் குறைத்து வைத்துப் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நன்கு கிளறி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். தயிர் சாதத்துடன் பரிமாறவும்.  
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...