எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 ஏப்ரல், 2022

கொள்ளு பார்லி சூப்

கொள்ளு பார்லி சூப்



தேவையானவை:- கொள்ளு – ஒரு கப், பார்லி – அரை கப் எடுத்துத் தனித்தனியாக லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கல்பாசிப்பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, சோம்பு, சீரகம், உளுந்து, மிளகு – தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை, கொத்துமல்லி – சிறிது.

செய்முறை:- பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சோம்பு, சீரகம், மிளகு தாளித்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு வதக்கி மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும். கொள்ளுப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், பார்லிப் பொடி அரை டேபிள் ஸ்பூன் போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...